முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது இந்தியா அமெரிக்கா பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா பொறுப்புணர்வுடன் செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.

 கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய நடவடிக்கைகளை சிறப்பாக இந்தியா சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தானை விமர்சித்துள்ள அமெரிக்கா, அமைதியை நிலைநாட்டுவதிலும், தலிபான்களை ஒடுக்குவதிலும் அந்நாடு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர் ஆலிஸ் வெல் செய்தியாளர்களிடம் வாஷிங்டனில் நேற்று கூறியதாவது:
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் கடந்த மாதம் முத்தரப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதில் பங்கேற்று பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர்.

குறிப்பாக மூன்று நாடுகளுக்கு இடையேயான வர்ததகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. மேலும், பரஸ்பர நல்லுறவை மேம்படுத்து தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதனை பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருத வேண்டியதில்லை.

ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கான எண்ணமும் அமெரிக்காவுக்கு இல்லை.

ஆப்கானிஸ்தானின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய நடவடிக்கைகளில் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது.

பாகிஸ்தானும் அதேபோன்று அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளிலும், தலிபான்களை ஒடுக்கும் பணிகளிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து