எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ட்எலிசபெத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி போராடி முன்னிலை பெற்றது. டீன் எல்கர், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
போர்ட்எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 63, பான்கிராப்ட் 38, டிம் பெய்ன் 36, ஸ்டீவ் ஸ்மித் 25, ஷான் மார்ஷ் 24 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5, நிகிடி 3, பிலாண்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
முதல் விக்கெட்டுக்கு வார்னர் - பான்கிராப்ட் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த போதிலும் மற்ற வீரர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 11 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
டீன் எல்கர் 11, ரபாடா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ரபாடா 40 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 29 ரன் கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஹசிம் ஆம்லா, எல்கருடன் இணைந்து நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
இந்த ஜோடி ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை கவனமாக எதிர்கொண்டது. ஆம்லா 122 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும், எல்கர் 164 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும் அரை சதம் கடந்தனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை மிட்செல் ஸ்டார்க் பிரித்தார். அபராமாக வீசப்பட்ட ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆம்லா ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார். ஆம்லா 148 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். எல்கருடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு ஆம்லா 88 ரன்கள் சேர்த்தார்.
சிறிது நேரத்தில் எல்கரும் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 197 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹசல்வுட் பந்தில் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டீன் எல்கர். அப்போது ஸ்கோர் 155 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 9, தியூனிஸ் டி பிரைன் 1 ரன் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷின் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குயிண்டன் டி காக் 9 ரன்களில் நாதன் லயன் பந்தில் போல்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதும் மறு முனையில் அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 62 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். 91-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 243 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 95 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், பிலாண்டர் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 20 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 3 விக்கெட்கள் இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.