முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 14 மார்ச் 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில்  நடைபெற்றது.

ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர்  தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் முந்தைய ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் ஓய்வூதியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  மேலும், ஓய்வூதியர்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டன.மேலும் 16 ஓய்வூதியதார்களுக்கு மருத்துவ செலவின தொகை திரும்ப அளித்தல் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3,75,377-க்கான காசோலையை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  வழங்கினார். இக்கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் எஸ்.மஞ்சுளா, துணை இயக்குநர் இ.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஸ்ரீதர், மாவட்ட கருவூல அலுவலர் சீனிவாசன், கூடுதல் கருவூல அலுவலர் சித்ரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து