முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாகூரில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

வியாழக்கிழமை, 15 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் லாகூர் நகரில் போலீஸ் சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், லாகூரிலுள்ள ரைவிண்ட் நகரில் உள்ள நிசர் போலீஸ் சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இளைஞர் ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நான் ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவர் உள்ளே வர முயற்சித்தார். அவரை என் உடன் பணிபுரிந்தவர் தடுத்த நிறுத்த முயற்சித்தபோது எனக்கு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. எனக்கு மருத்துவமனையில்தான் நினைவு திரும்பியது என்று தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து