எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹான் சங்கரதாஸ் ஸ்வாமிகளை நேரில் சந்தித்து வணங்கி அவரிடம் ஆசியும் விபூதி பிரசாதமும் பெற்று நாடகங்களை நடத்தத் தொடங்கினார்.அதன்படி தென்னிந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் நாடகங்கள் நடத்தியது மட்டுமின்றி சிலோன்,யாழ்ப்பாணம்,நுவரேலியா போன்ற இடங்களில் பல்வேறு சரித்திர நாடகங்களை பி.கா.சுப்பாரெட்டியார் நடத்தி வந்துள்ளார்.ஒரு சமயத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால்நேரு அவர்களை சந்தித்து பணமுடிப்பு கொடுத்து ஆசியும் பெற்றுள்ளார்.பின்னர் 1933-34ல் பர்மாவிலுள்ள ரெங்கூன் சென்று சிறப்புற நாடகம் நடத்தியதுடன்,1935 முதல் 1941 வரை 6ஆண்டுகள் சிங்கப்பூர்,மலேயா ஆகிய இடங்களுக்கு சென்று நாடகம் நடத்தி வந்த பி.கா.சுப்பாரெட்டியார் பெரும் கீர்த்தியுடன் வலம் வந்துள்ளார்.
இவர் ஆரம்பித்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக அப்போது வலம் வந்துள்ளது.இந்த பாய்ஸ் கம்பெனியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன்,இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்,எஸ்.எஸ்.சுப்பையா, ஏ.பி.நாகராஜன்,டி.எம்.சிவதாணு, பெண்வேட ஸ்பெசலிஸ்ட் டி.ஆர்.மகாலிங்கம்,மயில்வாகனன்,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,டி.எஸ்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட மாபெரும் நடிகர்கள் தங்கியிருந்து பல்வேறு நாடகங்களில் நடித்து அன்றைய காலகட்டத்தில் சாதனை படைத்துள்ளனர்.அப்போது பி.கே.சுப்பாரெட்டியாரின் சரஸ்வதி சபதம்,சத்தியவான் சாவித்திரி,அரிச்சந்திரன் மயான காண்டம்,சதிலீலா,கிருஷ்ணலீலா,நாரதலீலா போன்ற நாடகங்கள் மக்களிடம் மிகவும் புகழ்பெற்றவையாகும்.இருப்பினும் இந்த நாடகங்கள் அனைத்திலும் ஸ்ரீலஸ்ரீ சங்கரதாஸ் ஸ்வாமிகளின் மெட்டுக்கள் மட்டுமே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.நாடகத் துறைக்கு இத்தகைய சிறப்புகள் செய்து வந்த பி.கா.சுப்பாரெட்டியாருக்கு 1936ம் ஆண்டு மாஸ்டர் கிட்டப்பாவினால் நாடகச்செல்வர் என்ற பட்டம் ராயல் தியேட்டரில் வைத்து வழங்கப்பட்டது.இருப்பினும் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்ட கலாசிகாமணி பட்டம் நாடக கலைஞர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
மிகச் சிறந்த முருக பக்தரான பி.கா.சுப்பாரெட்டியார் இலங்கையில் நாடகம் நடத்தச் சென்றிடும் போது கண்டி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இதையடுத்து கதிர்காமம் ஸ்ரீ கதிரேசப்பெருமான் தன்னுடனே இருக்கவேண்டும்மென நினைத்த பி.கே.சுப்பாரெட்டியார் அங்;கிருந்து பிடிமண் எடுத்து பெட்டியில் வைத்து வந்து புளியமாநகரிலுள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து வழிபட்டு வந்துள்ளார்.பின்னர் தனது உழைப்பிற்கு ஊதியமாக கிடைத் ஒருலட்ச ரூபாயை வைத்து புளியமாநகரில் ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலை கட்டியுள்ளார்.இந்த கோவில் பார்ப்பதற்கு கதிர்காமம் முருகன் கோவில் போன்றும்,கோவிலின் உட்புறங்கள் அனைத்தும் அந்தகால பர்மா தேக்கு மற்றும் மலேயா டைல்ஸ் வைத்து அழகுற கட்டப்பட்டுள்ளது. 1963ம் ஆண்டில் இவருக்கு 73வயதான போதும் கோவிலின் முன்மண்டபம் கட்டுவதற்காக தேவைப்பட்ட நிதியை நாடக கலைஞர்களிடம் திரட்டி கட்டுமானப்பணிகளை முழுமையாக நிறைவு செய்தார்.இதற்கு அவர் அச்சிட்ட துண்டு பிரசுரம் இன்றும் கோவிலில் பிரேம் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இத்தகைய சிறப்பான சேவை செய்து ஸ்ரீ கதிரேசப்பெருமானுக்கு பி.கா.சுப்பாரெட்டியார் கட்டிய ஆலயத்தில் சன்னதியை பார்த்து கைகூப்பி நின்றபடி சிலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையை தற்போது நாடககலைத் துறையில் இருப்போர்கள் இங்குவந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியார் உயிருடன் இருந்த காலத்தில் புளியமாநகரிலுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் ஆடி மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுகின்ற உற்சவ திருவிழாவில் நாடகத்துறையின் அனைத்து ஜாம்பவான்களும் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபாடு நடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.அப்போது விழாவில் பங்கு கொள்ளும் பல்லாயிரக்க ணக்கான மக்களுக்கு கோவிலின் வளாகத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி இன்று வரை தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த கோவிலில் பி.கா.சுப்பாரெட்டியாரின் மகன் குருசாமி என்பவரது மகனான கந்தசாமி என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.இங்குள்ள கதிரேசப்பெருமானை நினைத்து வழிபாடு செய்தால் ஆயுசு பெருகிடும்,நினைத்த காரியம் கைகூடிடும்,பிரச்சனைகள் முடிவடையும்,திருமண காரியங்களின் தடைகள் நீங்கிடும்,காவடி எடுத்து வழிபட்டால் நோய்நொடிகள் நீங்கிடும்,இலங்கையில் உள்ளது போன்று இங்கும் 12இணைப்புகள் கொண்ட தெடில்காவடி உள்ளது.உற்சவ காலங்களில் இந்த காவடி எடுத்துவரப்படும் என்று பூசாரி கந்தசாமி தெரிவித்தார்.
இருப்பினும் அன்றாடம் கோவிலுக்கு வருகை தந்திடும் பக்தகோடி பெருமக்கள் கோவிலின் முன்புறமுள்ள ஊரணி தீர்த்தத்தில் நீராடி கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து ஸ்ரீ கதிரேசப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு விபூதியை பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர்.நாடகக்கலையின் காவலராக வலம் வந்த பி.கா.சுப்பாரெட்டியார் இன்று உயிருடன் இல்லை.ஆனால் கோவிலின் சன்னதியில் இன்றும் சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.ஆனால் அவர் தனது சொந்த உழைப்பினால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் புளியம்பட்டியில் கட்டியுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவில் நீடித்த ஆயுளுடன் தன்னத்தே வருபவர்களுக்கு ஆயுசை வாரி வழங்கி வருவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.