முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. புதிய அமைப்பு செயலாளர்கள் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வாழ்த்து

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைப்பு செயலாளர்கள் சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.தி.மு.க.வின் புதிய அமைப்பு செயலாளர்களாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயகுமார், சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட செயலாளர்களாக தி.நகர் சத்யா, ப.குமார் எம்பி. ஆகியோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நியமித்து அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் . எடப்பாடிபழனிசாமியை அவரது இல்லத்தில் புதிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர், அமைப்புச் செயலாளர்களான, வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், சேவூர் எஸ். இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் ஆகியோரும், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் அ.தி.மு.க மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் அ. அழகு தமிழ்செல்வி, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர். தி .நகர். சத்யா, எம்.எல்.ஏ. ஆகியோர் தனித் தனியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து