முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஸ்மிரிதி இராணி

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார். டெல்லியில் நடந்த பத்திரிக்கை நிகழ்வு ஒன்றில் அவர் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இராணியின் இந்த அறிவிப்பு நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்கள் குறித்து பேசிய போது, டுவிட்டரில் அரசையும், அரசியல்வாதிகளையும் மோசமாக கலாய்க்கிறார்கள். விதவிதமாக எதிர்த்து பேசுகிறார்கள். இதை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் காரணமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை பார்ப்பதே இல்லை என்று ஸ்மிரிதி இராணி தெரிவித்தார். மேலும் என்னுடைய முதல் பிரச்சனையே, இப்போது எல்லோருக்கும் பேச இடம் கிடைத்து விட்டது என்பதுதான். தொழில் நுட்பம் அரசை கட்டுப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. செய்திகள் கூட சமூக வலைத்தளத்தை நம்பித்தான் இருக்கிறது என்றும் ஸ்மிரிதி இராணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து