முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு நிதியுதவி கேட்டு பிரதமரை சந்திக்கிறார் திரிபுரா முதல்வர் விப்லப்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

அகர்தலா : திரிபுராவின் நிதி நெருக்கடியை சமாளிக்க சிறப்பு நிதியுதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் விப்லப் குமார் தேவ் விரைவில் சந்திக்கவுள்ளார்.

இது குறித்து மாநில போக்குவரத்து அமைச்சர் பிரனஜித் சிங்க ராய் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திரிபுரா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் பற்றாக்குறை ரூ. 1,588 கோடியாக உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து அறிக்கை தயாரிக்குமாறு நிதித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். அறிக்கை தயாரானவுடன் முதல்வர் விப்லவ் குமார் தேவ் டெல்லி புறப்படுவார். மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வரும் வேளையில் வருவாய் உற்பத்தி குறைவாக உள்ளது. மாநில சட்டசபை கூட்டம் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக முதல்வர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சரை சந்திப்பார். இவ்வாறு அமைச்சர் பிரனஜித் கூறினார். திரிபுராவின் முதல் பா.ஜ.க முதல்வராக விப்லப் குமார் கடந்த 9-ம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து