முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36 சிரியா ராணு படையினரைக் கொன்று டமாஸ்கஸ் பகுதியை கைப்பற்றியது ஐ.எஸ்.

புதன்கிழமை, 21 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள காதம் என்ற பகுதியில் அதிரடியாகத் தாக்குதல் நிகழ்த்திய இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகள், 36 அரசுப் படையினரைக் கொன்றுவிட்டு அந்தப் பகுதியைக் கைப்பற்றினர்.

அண்மைக் காலமாக, தொடர் தோல்வியால் ராணுவத் தாக்குதல்களைத் தவிர்த்து வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், யாரும் எதிர்பாராத விதமாக இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

டமாஸ்கஸ் நகரிலுள்ள காதம் பகுதியில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நள்ளிரவில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியையொட்டி, தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹஜார் அல்-அஸ்வாத் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்தத் தாக்குதலில் 36 அரசுப் படையினர் உயிரிழந்தனர். இன்னும் ஏராளமான வீரர்கள் காயமடைந்திருக்கலாம், அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, காதம் பகுதி தற்போது முழுமையாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

தற்போது அந்தப் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் சிரியா அரசு அந்தப் பகுதியை நோக்கி கூடுதல் படையினரை அனுப்பி வைத்துள்ளது என்றார் அவர். டமாஸ்கஸ் நகரின் தெற்கே அமைந்துள்ள காதம் பகுதி, சிரியா உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு பல்வேறு குழுக்களுக்கு கைமாறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகள், அவர்களது பரம எதிரியான அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினர் ஆகியோரது கட்டுப்பாட்டில் அந்தப் பகுதி இருந்து வந்தது. காதம் பகுதியை மீட்க சிரியா அரசு ராணுவ ரீதியிலும், பேச்சுவார்த்தை மூலம் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பலனாக, இந்தப் பகுதியை கடைசியாக கைவசம் வைத்திருந்த ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பினரருடன் உடன்பாடு ஏற்பட்டு, இந்தப் பகுதியிலிருந்து கிளர்ச்சிப் படையினர் தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக வெளியேற சிரியா அரசு அனுமதித்தது. அவர்கள் அனைவரும் இத்லிப் மாகாணத்தின் வடமேற்குப் பகுதிக்குச் சென்றதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் குறித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், காதம் பகுதியில் சிரியா படைகளிடம் ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பினர் தாரைவார்த்துத் தந்த பகுதிகள் உள்பட பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர். தற்போது சிரியா படையினர் தீவிர சண்டையில் ஈடுபட்டு வரும் கிழக்கு கெளட்டா பகுதி, காதம் பகுதியுடன் தொடர்பில்லாத வகையில் வெகு தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

15 சிறுவர்கள் பலி: இதற்கிடையே, கிழக்கு கெளட்டா பகுதியில் சிரியா படையினர் நடத்திய விமானத் தாக்குதலில், பள்ளியில் தஞ்சமடைந்திருந்த 15 சிறுவர்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து