முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி மணலையும் இனி அரசே விற்கும்: தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு இன்று முதல் டெண்டர் கோரப்படும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 21 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக்ததில் இறக்குமதி மணலை இனி அரசே விற்கும் என்றும் தனியார் யாரும் இனி மணல் விற்க முடியாது என்றும் சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு நாளை (இன்று) முதல் டெண்டர் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தா்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ராமசாமி பேசும் போது, தமிழகத்திற்கு, வருமானம் தரும் மணல் வியாபாரத்தை அரசு கையில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தட்டுப்பாடு இல்லாமல்...

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:-

மணல் தொடர்பான பிரச்சினை தொடர்பாக, பொது நல வழக்கு நீதி மன்றத்தில் இருந்தது. தற்போது, தீர்ப்பு வந்துள்ளது. தமிழக அரசு, மணல் விற்கவும், குவாரிகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. மணல் குவாரிகளுக்கான டெண்டர் நாளை (இன்று) கோரப்பட உள்ளது;  இனி தவறுகள் நடக்காமல் இருக்க, அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குவாரிகளை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைனில்...

மேலும், ஆறு மற்றும் ஓடை பகுதியில் மணல் எடுக்கும் இடத்தில், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும். மணல் எடுத்து செல்லும் வாகனங்கள் எங்கே செல்கிறது? யாருக்கு போகிறது என்பதை கண்காணிக்கவும் கருவிகள் பொருத்தப்படுகிறது. மணல் குவாரிகளுக்கான டெண்டர் நாளை (இன்று) கோரப்பட உள்ளது; ஆன் லைன் மூலம், மணல் வியாபாரம் நடைபெறும். மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்கும். வெளி நாடுகளில் இருந்து, மணல் இறக்குமதி செய்து, ஆன்லைனில் அரசே விற்கும். இறக்குமதி செய்யப்படும் மணல், கலப்படமா? கட்டுமானத்திற்கு ஏற்றதா எனவும் ஆய்வு செய்யப்பட்டே விற்பனை செய்யப்படும்.

தனியார் விற்க முடியாது

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல், தூத்துக்குடியில் வைக்கப்படும். தமிழகத்தில், தனியார் யாரும் இனி மணல் விற்க முடியாது. தமிழக அரசின் அனுமதியோடு தான், இனி மணல் விற்க முடியும் என்றார். தூத்துக்குடியில் ஏற்கனவே வந்த வெளிநாட்டில் இறக்குமதியான மணல் குறித்து, தி.மு.க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி; அந்த மணல் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தடுத்து நிறுத்திவிட்டோம். மேலும், அந்த மணலில் சிலிகான் அதிகம் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து