எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 675 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 6973 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.
ஆய்வுக்கூட்டம்
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் தேர்தல் குறித்து அறிவுருத்தியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் சரக துணைப்பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செயற்பதிவாளர்கள் மீன்வளத்துறை, கைத்தறி துணிநூல் துறை, வேளாண்மைத் துறை, கதர்கிராம தொழில் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை, கூட்டுறவு வீட்டு வசதி துறை, கூட்டுறவு பால் வளத்துறை, மாவட்ட தொழில் மையம், பட்டு வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை ஆகிய பத்து செயற்பதிவாளர்களில் 388 சங்கங்களுக்கும் பதிவாளர் கட்டுப்பாட்டில் 287 சங்கங்கள் ஆக மொத்தம் 675 சங்கங்களில் 6973 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு முதல் கட்டத்தில் நான்கு நிலைகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியல் தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு வாக்காளர் பட்டியல் அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வேப்புமனு தாக்கல் வருகின்ற 26.03.2018 ஆம் தேதியும் வேட்புமனு பரிசீலனை 27.03.2018 ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறுதல் 28.03.2018 ஆம் தேதியும், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். மேலும் தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டத்தில் முதல் நிலையில் 02.04.2018 அன்றும், இரண்டாம் நிலை 07.04.2018 அன்றும், மூன்றாம் நிலை 16.04.2018 அன்றும், நான்காம் நிலை 23.04.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பயிற்சி வகுப்பு
வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் கூட்டுறவு சங்க அலுவலர்களால் எடுக்கப்பட வேண்டும். தற்போது நடைபெறவுள்ள கூட்டுறவுத் தேர்தலில் முதல் முறையாக பொதுத் தேர்தலில் உள்ளது போல் நன்னடத்தை விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் அலுவலர்களாக கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் முதுநிலை ஆய்வாளர், கூட்டுறவு சார்பதிவாளர் அளவிலும், கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் இதர துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் முதுநிலை ஆய்வாளருக்கு சமமான பதவியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும்.
தேர்தல் அலுவலர்களாக கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் தேர்தலுக்கான படிவங்கள் அனைத்தும் கூட்டுறவு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் தேர்தல் குறித்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி வகுப்புகளை முறையாக தெரிந்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர் ஓராண்டுற்கு மேலாக சிறை தண்டனை பெற்றிருந்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது. இதுபோன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமுறைகளை அலுவலர்கள் தெரிந்துக்கொண்டு சிறப்பாக எந்த பிரச்சனையின்றி கூட்டறவு சங்க தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டுறவுத் தேர்தலுக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு தேர்தல் கையேடு வெளியிட அதனை கலெக்டர் சி.அ.ராமன், பெற்றுக்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், கூட்டுறவு பதிவாளர் செயலர் ஜான்பீட்டர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, இணை இயக்குநர் (வேளாண்மை) வாசுதேவரெட்டி மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.