எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி,- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் வந்த 36 பேர்களில் கொழுக்குமலைக்கு கீழே உள்ள ஒத்தமரத்தடியில் காட்டு தீயில் சிக்கி பலியான 18 பேர்கள் இறந்த பகுதிகளை சிறப்பு அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, ஈரோடு, கோயமுத்தூரை சேர்ந்த 36 பேர்கள் போடி வழியாக குரங்கணியிலிருந்து ட்ரெக்கிங் என்ற மலை ஏறும் பயிற்சியாக நடந்து டாப்டேஷன் மூணாறு வந்தடைந்தனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு 3 ஜீப்புகளில் தேவிகுளம், முட்டுகாடு, சின்னகானல், சூரியநல்லி வழியாக கொழுக்குமலை வந்தடைந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார்கள்.
பிறகு மறுநாள் 11-ம் தேதி கிளம்பியவர்கள் சரியாக சுமார் 2 மணியளவில் ஒத்தமரம் வந்தடைந்து மதிய உணவு அருந்தி விட்டு சுமார் 3.30 மணியளவில் நடக்க துவங்கினார்கள். ஏற்கனவே கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக குரங்கணி மலை பகுதிகளில் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து ஒத்தமரப்பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவில் தீப்பற்றி எரிந்தது. அந்த தீயிலிருந்து தப்பிப்பதற்காக 36 பேர்களும் நாலா பக்கமும் தெறித்து அங்கும் இங்கும் ஒடி பள்ளங்களில் உருண்டு தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி மாட்டி கொண்டனர். குரங்கணியை சேர்ந்த ராஜேஸ் என்ற வழிகாட்டி 10 பேர்களை அழைத்து கொண்டு வேறு பாதையில் தப்பித்து விட்டார்.
இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமையில், தேனி எஸ்.பி பாஸ்கரன், போடி டி.எஸ்.பி பிரபாகரன் ஆகியோர் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலேயே 9 பேர்கள் பலியாகிவிட்டனர். தீயில் கருகியும் கை கால்கள் உடைந்தும் தப்பிய 27 பேர்களை மீட்டு தேனி, மதுரை, கோவை, ஈரோடு மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வரையில் பலி எண்ணிக்கை 18 உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை, முதன்மை செயலர் அதுல்யாமிஸ்ரா ஐ.ஏ.எஸ் விசாரனை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் தீவிபத்து குறித்து விசாரணை செய்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் அதுல்யாமிஸ்ரா தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரமாக அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 22-ம் தேதி காலையில் 7 மணிக்கு குரங்கணியிலிருந்து ஆய்வு துவங்கும் என அறிவித்தார். அதன்படி நேற்று காலை 6.40 மணிக்கு சிறப்பு அதிகாரி குரங்கணிக்கு கலெக்டர் பல்லவிபல்தேவ், போடி டி.எஸ்.பி பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர், வனத்துறையினர்கள் வந்தடைந்தனர். குரங்கணியில் இருந்து காலை 7 மணியளவில் ஒத்தமரம் மலை பகுதி நோக்கி செங்குத்தான மலையில் 7 கிலோ மீட்டர் நடந்து சென்றடைந்தார். தீவிபத்தில் சிக்கிய 36 பேர்களும் உணவு அருந்திய இடம், தீப்பற்றி பரவிய இடம், தப்பிப்பதற்காக சிதறி ஓடி உருண்டு விழுந்த பள்ளம், பிணங்களை அடுக்கி வைக்கப்பட்டு ஹெலிகாப்ட்டரில் மீட்டெடுத்து சென்ற ஒத்தமரம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் அதுல்யாமிஸ்ரா கூறுகையில்,
9 பேர்கள் தீயில் கருகி பலியான மற்றும் ஒத்தமரப்பகுதிகளை பார்வையிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்கள் கொழுக்குமலையில் தங்கியிருந்த தனியார் விடுதி பார்த்து விட்டு பின்னர் மூணாறு, டாப்டேஷன் வரை சென்று பார்வையிட்டு இரவிற்குள் போடி திரும்பி விடுவேன். மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை போடி நகராட்சி அலுவலகத்தில் தீவிபத்து நிகழ்ச்சி பற்றிய சிறப்பு விசாரனை அலுவலகம் திறக்கப்படும். அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்களிடமிருந்து ஆடியோ, வீடியோ பதிவுகள், அவர்களும் உரையாடிய பதிவுகள், கிராம மக்கள் அவர்களின் உயிர்களை பணையம் வைத்து தீயில் கருகியவர்களை காப்பாற்றி உள்ள நிகழ்வு பதிவுகள் என எது இருந்தாலும் நேரில் வந்து தெரிவிக்கலாம், ஆதாரங்களை தரலாம் இறந்து போனவர்களின் சொந்த ஊர்களுக்கே நேரில் சென்று விசாரிக்க இருக்கிறேன் என்றார்.
தீ விபத்து நடந்த ஒத்தமரம் பகுதியில் ஆய்வு செய்த பின்னர் அதுல்ய மிஸ்ரா கொழுக்குமலையில் இருந்து கேரள மாநிலம் வழியாக தமிழக எல்லையான டாப்ஸ்டேசன் சென்றார். அங்கிருந்து மீண்டும் மலைப்பாதை வழியாக நடந்தே குரங்கணி வந்தடைந்தார். அதுல்யமிஸ்ராவுடன் தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் உதயன், மதுரை மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் ராகேஷ்குமார், தேனி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மேகமலை வனச்சரணாலய அலுவலர் ராம்மோகன், மாவட்ட வன அலுவலர் கந்தசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேலு, வன ஆர்வலர் டாக்டர் என்.ஆர்.டி.ராஜ்குமார், போடி டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர். தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் குரங்கணி, கொழுக்குமலை, டாப்ஸ்டேசன் ஆகிய இடங்களில் விசாரணைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.