முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 2018: பயிற்சியை தொடங்கினார் சி.எஸ்.கே கேப்டன் டோனி

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று முதன்முறையாக ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

மூத்த வீரர்களை...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அணி வீரர்களும் ஐபிஎல் பயிற்சி முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருட தடைக்குப்பின் தற்போது களம் இறங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மூத்த வீரர்களை அதிக அளவில் ஏலம் எடுத்துள்ளது. புதுக்கலவையுடன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்க இருக்கிறது.

முதன்முறையாக பயிற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வந்த வண்ணம் மூத்த வீரர்களான ஹர்பஜன் சிங், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஆன டோனி விளையாடவில்லை. அந்த சமயத்தில் ஓய்வு எடுத்த டோனி, நேற்று சிஎஸ்கே அணிக்காக முதன்முறையாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவருடன் அம்பதி ராயுடு, ஜடேஜா, ரெய்னா, ஷர்துல் தாகூர் ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் டோனியை ‘தல’ என குறிப்பிட்டுள்ளது. ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து