முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      ஆன்மிகம்
Image Unavailable

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமா£த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளினார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழச்சி நடைபெறுகிறது. இரவு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து