முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ரஷியா - துருக்கி - ஈரான் பேச்சு

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

அங்கரா: சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் துருக்கியில்  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிரியாவில் அதிபர் அல்-அஸாத் தலைமையிலான அரசு, கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆகியவையிடையே கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கக் காரணமான இந்தப் போரில், அமெரிக்கா மட்டுமின்றி, ரஷியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துவது தொடர்பான முத்தரப்பு மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் புதன்கிழமை நடைபெற்றது.

ரஷிய அதிபர் விளாதிமீர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன், ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

சிரியா விவகாரத்தில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் நிலவினாலும், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ள இந்த மூன்று நாடுகளும், இந்த விவகாரம் குறித்து நடத்தும் இரண்டாவது முத்தரப்பு மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, ரஷியாவின் சோச்சி நகரில் இந்த முத்தரப்பு மாநாடு முதல் முறையாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து