முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவையை மாற்ற இலங்கை பிரதமர் ரணில் முடிவு?

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இந்த இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு எதிராக ராஜபக்சே தலைமையிலான எஸ்.எல்.பி.பி கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில், 122 எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராகவும் 76 எம்.பி.க்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால், ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மையினர் கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை ரணில் அமைக்கக் கூடும் என கூறப்படுகிறது. அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த சிறிசேனா கட்சி அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து