முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீது ஏவுகணை பாயும்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: சிரியா மீது ஏவுகணை பாயும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘‘சிரியா மீது ஏவப்படும் எல்லா ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்துவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. தயாராக இரு ரஷ்யா. ஏனெனில் அமெரிக்க ஏவுகணைகள் வரும். ரசாயன வாயுவை செலுத்தி சொந்த நாட்டு மக்களை அழித்து மகிழ்ச்சி காணும் விலங்குடன் (சிரிய அதிபர் ஆசாத்) நீங்கள் கூட்டாக செயல்படக் கூடாது’’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர்  டிரம்ப்பின் மிரட்டலுக்கு ரஷ்ய எம்.பி.க்கள் கூறியபோது, ‘‘சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீசினால், அதை போர் குற்றமாக ரஷ்யா கருதும். அதன்பிறகு ரஷ்யா - அமெரிக்கா இடையே நேரடி போர் ஏற்படும்’’ என்று பதிலுக்கு எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து