எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஙிங்: பெற்றோர் கார் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஷென் ஜீ, லியு ஜி. இருவருக்கும். கடந்த 2011-ம் ஆண்டு ஆண்டு திருமணமானது. இவர்கள் இருவரும் தங்களின் உயிரணுக்களை நங்ஜியான் நகரில் உள்ள டிரங்க் மருத்துவமனையில் பாதுகாக்க வைத்திருந்தனர். இருவரின் உயிரணுக்களும், லியுவின் கருமுட்டைகளும் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் குளிரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஆண்டு ஷென் ஜீ, லியு ஜி ஆகிய இருவரும் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே லியு ஜி உயிரிழந்தார். மருத்துவமனையில் 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஷென் ஜீயும் மரணமடைந்தார்.
இதனால், ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் வயதான பெற்றோருக்கு அடுத்து ஆதரவில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று தங்கள் பிள்ளைகளின் உயிரணுக்களையும், கருமுட்டைகளையும் ஷென் ஜீ, லியு ஜி பெற்றோர் கோரினார்கள். ஆனால், அவர்களிடம் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து வயதான பெற்றோர் இருவரும் நீதிமன்றத்தை நாடினர். பலஆண்டுகளாக பலவிதமான சட்டப்போராட்டங்களை நடத்தினார்கள். தங்களின் பிள்ளைகளின் கருமுட்டைகள், உயிரணுக்களும் தங்களுக்கே சொந்தம் அதை எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதன் மூலம் எங்களின் வம்சத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறோம் என்று நீதிமன்றத்தில் வயதான பெற்றோர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உயிரணுக்களை, கருமுட்டைகளை வழங்க அனுமதியில்லை.
ஆனால், இந்த வழக்கை அரிதினும் அரிதாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பின் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் உயிரணுக்களையும், லியுவின் கருமுட்டைகளையும் வயதான பெற்றோர் வசம் ஒப்படைக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
மருத்துவமனை நிர்வாகமோ தான் நேரடியாக கருமுட்டைகளையும், உயிரணுக்களையும் ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் பெற்றோர்களுக்கு தர இயலாது இந்த கருமுட்டைகளை எந்த மருத்துவமனையில் வளர்க்க விரும்புகிறார்களோ அந்த மருத்துவமனையின் பொறுப்பில்தான் தரமுடியும் என்று கூறிவிட்டது.
ஆனால், சீனாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் வாடகைத்தாய் மூலம் இந்த கருமுட்டைகளை வளர்க்க ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்களால் இயலவில்லை.
இதையடுத்து, உயிரிணுக்களையும், லியுவின் கருமுட்டைகளை, லாவோஸ் நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்கள் கொண்டு வந்தனர். அங்குள்ள ஒரு மருத்துமனையில் லியுவின் கருமுட்டைகள் வளர்க்கப்பட்டு, 27 வயதுடைய ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்க்கப்பட்டது.
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பின், 2017-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி வாடகைத்தாய் மூலம் குவாங்ஜூ மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏறக்குறைய ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆனபின் கடந்த மாதம் அதற்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. அந்த குழந்தைக்கு ‘டையன்டியன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. டையன்டியன் என்றால் ‘இனிப்பு’ என்று அர்த்தம்.
இந்த டையன்டியன் பிறந்தது குறித்து மறைந்த லியுவின் தாயார் ஹூ ஜின்ஜியன் கூறுகையில், ''என் பேரனைப் பார்க்கும் போது எனது மகளைப் பார்க்கும் ஞாபகம் வருகிறது. என் மகளின் கண்களைப் போன்று கண்கள், முகம், நிறம் என அனைத்தும் என் மகள் லியு போன்று இருக்கிறது'' என்று கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்.
இதற்கிடையே இந்த வயதான பெற்றோர்களுக்கு இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சீனாவின் விதிப்படி, இந்தக் குழந்தையின் டிஎன்ஏயும், தாத்தா பாட்டிகளின் டிஎன்ஏவும் தொடர்புடையதுதான் என்று நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே குழந்தையை தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்பது அடுத்த கட்ட சோதனையாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.