எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: 65-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பிராந்திய மொழி வரிசையில் இதுவரை திரைக்கு வராத 'டூலெட்' படம் தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகளும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வசூல் சாதனை படைத்த பாகுபலி-2-க்கு 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குனர் சேகர் கபூர் தலைமையிலான குழு இந்த 65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு விருதுகான படங்களை செய்துள்ளது. விருதுகளை அறிவிக்கும் போது, ‘பிராந்திய மொழி திரைப்படங்கள் தரத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றன’ என்று சேகர் கபூர் தெரிவித்தார்.
பாகுபலி-2 படம்
சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ’டு லெட்’க்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருந்தார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி-2 படம் 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த சண்டைப்பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாகுபலி-2 படம் விருது வென்றுள்ளது.
ஸ்ரீதேவிக்கு விருது...
சிறந்த நடிகர் விருது நகர்கிர்தன் படத்தில் நடித்த ரித்தி சென்னுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகையாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாம் படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மாம் வெளியாகியது. இளைஞர் ஒருவரால் ஏமாற்றப்படும் தனது மகளை தேற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஸ்ரீதேவி மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு...
சிறந்த இசையமைப்பாளராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார். காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெறுகிறார். அதேபோல் சிறந்த பாடகியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு வழங்கப்படுகிறது.
பார்வதி மேனனுக்கு...
மலையாள நடிகை பார்வதி மேனன் மலையாளத்தில் சிலபஸ் என்ற பட்த்தின் மூலம் 2006 ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து நோட் புக், பெங்களூர்ஸ் டே, என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப் உள்பட பல மலையாள படங்கலீல் நடித்து உள்லார். தமிழில் பூ, மற்றும் உத்தம வில்லன், மரியான் படங்களில் நடித்து உள்ளார். சிறப்பு பிரிவில் பார்வதி மேனனுக்கு தேசிய விருது அறிவிக்க்ப்பட்டு உள்ளது.
தேசிய விருதுகள் விவரங்கள் வருமாறு:-
* சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
* சிறந்த படம் பகத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்.
* சிறந்த இந்திப்படம் நியூட்டன்.
* சிறந்த தமிழ் படம் TO LET ( செழியன் இயக்கியுள்ள இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை).
* மாம் இந்தி படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது.
* சிறந்த தெலுங்கு படம் - காஸி.
* காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது .
* சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாசுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
* சிறந்த கன்னட படம்- ஹெப்பட்டு ராமக்கா.
* சிறந்த குழந்தைகள் படம்- மேகோர்கியா.
* சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது பெறும் படம்- டப்பா(மராத்தி).
* சிறந்த நடிகர்- ரித்தி சென் (நகர்கிர்டான், மேற்கு வங்கமாநிலம்).
* சிறந்த துணை நடிகர்- ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் , மலையாளம்).
* சிறந்த துணை நடிகை- திவ்யா தத்தா (இராடா).
* சிறந்த குழந்தை நட்சத்திரம்- பனிதா தாஸ், (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், அசாம்).
* தாதசாகேப் ஃபால்கே விருது- வினோத் கண்ணா, நடிகர்.
* சிறந்த பொழுதுப்போக்கு படம்- பாகுபலி- 2.
* சிறந்த இயக்குநர்- ஜெயராஜ் (பயானகம், மலையாளம்).
* சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது- பம்பாலி (சிஞ்ஜர்).
* சிறந்த ஒளிப்பதிவு- பயானகம், மலையாளம்.
* சிறந்த பாடலாசிரியர்- பிரஹலாத் (’மார்ச் 22’, முத்து ரத்தனந்த பியாடே).
* சிறந்த ஆடியோகிராஃபி - வில்லேஸ் ராக்ஸ்டார்ஸ், அசாமி.
* சிறந்த ஒலி அமைப்பு- லடுக்கி.
* சிறந்த அரங்கமைப்பு- டேக் ஆஃப் (சந்தோஷ் ராமன், டேக்-ஆஃப், மலையாளம்).
* சிறந்த ஒப்பனை- ராம் ரஜாஜ் (நகர்கிர்டான்,).
* சிறந்த ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்- பாகுபலி 2.
* சிறந்த நடனமைப்பு- கணேஷ் ஆச்சாரியா (டாய்லெட், இந்தி).
* சிறந்த சண்டைக்காட்சி- அப்பாஸ் அலி மொஹுல் (பாகுபலி 2).
* சிறந்த திரைக்கதை- தொண்டிமுதலும் திர்க்ஷாஷ்யம், மலையாளம்.
* சிறந்த தழுவல் திரைக்கதை- பயானகம், மலையாளம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் துவக்கம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் நேற்று துவங்கியது.