முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகளை மடக்கிய கலெக்டர்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரிகளை மாவட்ட கலெக்டர் மடக்கி பிடித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு
வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் வினய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,அகரம் பேரூராட்சி, கருங்கல்பட்டி சாலை வழியாக இரண்டு மணல் லாரிகள் சென்ற போது, அதனை நிறுத்தி, மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்ட போது, சரியான ஆவணங்கள் இல்லாமல் மணல் அள்ளப்பட்டு ஏற்றி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் லாரிகளை பறிமுதல் செய்து, உடனடியாக சம்மந்தப்பட்ட
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மேல் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட
கலெக்டர் வினய் உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர் வினயின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து