முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி பிரச்சினை: தைவானில் தமிழ் சங்கத்தினர் போராட்டம்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

தைபே: தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடைபெறும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மேலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு போராட்டம் ஒருங்கினைக்கப்பட்டது.

தைபேயில் உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் முன்புறம் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர், முனைவர். சங்கர் ராமன் தலைமை தாங்கினார்.

இடிமுழக்கத்துடன் கூடிய‌ கொட்டும் மழையிலும், தைவான் வாழ் தமிழர்கள் திரளாக கூடினார்கள். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும் என்றும் தைவான் வாழ் தமிழர்கள் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து