முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அபுதாபி த.மு.மு.க செயற்குழு தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

அபுதாபி: அபுதாபியில் நடந்த மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமைக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அபுதாபி மண்டல த.மு.மு.க.வின் செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் அபுல்ஹசன் அவர்கள் தலைமையில் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கியது. மண்டல நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அமீரக த.மு.மு.க பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் பல ஆலோசனைகளை வழங்கியதோடு நிர்வாகிகளின் கடமையும், பண்புகளும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்.

மண்டல துணைச்செயலாளர் ஜஹாங்கீர்  நன்றியுரையோடு இறுதி துஆவோடு கூட்டம் முடிவுற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வருகின்ற ரமலானில் மே மாதம் 26-ம் தேதி இப்தார் நிகழ்ச்சியை சென்ற வருடத்தைவிட இன்னும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து