முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்:

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-  ராமேசுவரத்தில் மாத அமாவசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடி திருக்கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
   சித்திரை தமிழ் மாத அமாவாசை முன்னிட்டு வெளியூர்களிருந்து தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளிலும், ரயிலிலும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலையில் ராமேசுவரத்தில் குவிந்தனர். இவர்கள் அக்னிதீர்த்தக் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதன் பின்னர் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர்.தொடர்ந்து இராமநாதசுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தக் கிணற்றில் நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் மற்றும் தீபாராதணை வழிபாடுகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயிலில் பக்தர்களின் வருகையையொட்டி குடிநீர் வசதி தங்கும் இடம் பாதுகாப்பு உள்பட அடிப்படை வசதிகளை திருக்கோயில் இணைஆணையர் மங்கையர்க்கரசி உத்தரவின் பேரில் ஊழியர்கள் செய்திருந்தனர்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து