முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப்போட்டி: பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கினார்:

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கழக அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம்  ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கோலமிட்ட பொதுமக்களுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் கழக அம்மா பேரவை சார்பில் 70 சீர்வரிசை பொருட்களுடன் 120ஜோடிகளுக்கு மதுரை பாண்டிகோவில் அருகிலுள்ள அம்மா திடலில் திருமணவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி,துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 120ஜோடிகளுக்கான திருமணவிழாவை நடத்தி வைத்து நல்வாழ்த்து தெரிவித்தார்கள்.இதனிடையே மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 120ஜோடிகளுக்கான திருமணவிழாவையொட்டி திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமங்கலம் நகரம்,திருமங்கலம் ஒன்றியம்,கள்ளிக்குடி ஒன்றியம்,டி.கல்லுப்பட்டி ஒன்றியம்,பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக அம்மா பேரவை சார்பில் பிரமாண்டமான கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த கோலப்போட்டியை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் தங்களது வாசலெங்கும் இரட்டைஇலை கோலமிட்டும் வீதியெங்கும் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் கோலங்களிட்டும் தங்களது திறமைகளை சிறப்புடன் வெளிப்படுத்தி னார்கள்.இதையடுத்து கோலப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும்,சிறந்த முறையில் கோலமிட்ட சாதனையாளர்களுக்கும் 120ஜோடிகளுக்கான திருமணவிழா முடிந்த பின்பு பரிசுகள் வழங்கப்படுமென தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருந்தார்.இதையடுத்து அமைச்சரின் அறிவிப்பின்படி திருமங்கலம் ஒன்றியத்திற்கு உச்சப்பட்டி,காந்திநகர்,கப்பலூர்  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டிகளில் பங்ககேற்றவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கும்,சிறப்பாக கோலமிட்டவர் களுக்கும் சிறப்பு பரிசாக அழகிய சில்வர் பாத்திரங்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் தனது அழைப்பினை எற்று 120ஜோடிகளுக்கான திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய திருமங்கலம் ஒன்றிய பொதுமக்கள் அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்சியில் மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணிச் செயலாளர்கள் திருப்பதி,தமிழ்ச்செல்வம்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்;ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி,மகாலிங்கம்,ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதி சாமிநாதன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,மாநகர் அம்மா பேரவை வெற்றிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து