முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிவில்லியர்ஸுக்கு கோலி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு: ஏ.பி. டி. வில்லியர்ஸ், டி. காக் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.

பெங்களூருவில்  நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. பெங்களூரு அணி தரப்பில் டிவில்லியர்ஸ் 57, டிகாக் 45, மன்தீப் சிங் 22, கேப்டன் விராட் கோலி 21 ரன்கள் எடுத்தனர். 3 விக்கெட்கள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விராட் கோலி கூறும் போது, உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டம் என்பதால் இது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. கடந்த ஆண்டு தொடக்கப் போட்டி எங்களுக்கு சோதனையாக அமைந்தது. இந்த ஆண்டுகள் பெங்களூரு அணி கோப்பையை வெல்லவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ், டி காக் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். மொத்தத்தில் இந்த ஆட்டம் எங்களுக்கு சிறப்பானதாக அமைந்தது என்றார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறும்போது, இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், எங்கள் அணி வீரர்கள் வெற்றிக்காகப் போராடியது பெருமையாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் போராடித் தோல்வி கண்டோம். நாங்கள் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். இருந்தபோதும் 156 என்ற இலக்கை வைத்து பெங்களூரு அணியை எதிர்கொண்டோம். எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். முஜீப் அருமையாக பந்து வீசினார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து