முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.  முதல் இருகட்டத்தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5–வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

அவசர வழக்காக விசாரணை
இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இந்த மனுவை வெள்ளிக்கிழமையன்று (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தால் தன்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து