முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1600 கோடியை செலுத்திய நோக்கியா..!

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      வர்த்தகம்
Image Unavailable

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை தொடங்கியது. இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு வரி ஏய்ப்பு பிரச்னையில் நோக்கியா நிறுவனம் சிக்கியது. இதனால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு என்கிற பெயரில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் நோக்கிய நிறுவனம் 1600 கோடியை மத்திய அரசிடம் செலுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக சென்னையில் உள்ள நோக்கியோ நிறுவனம் மூடப்பட்டிருந்த நிலையில் வரிஏய்ப்பு தொகையை மத்திய அரசாங்கத்திடம் நோக்கியா நிறுவனம் செலுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான பிரச்னைகளை விரைவில் இந்திய அதிகாரிகளுடன் பேசி தீர்க்க உள்ளதாக நோக்கியாவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து