முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாள் சுற்றுப்பயணம் முடிந்தது! நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்ற பிரதமர் மோடி, சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியா திரும்பினார்.

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றார்.முதல் கட்டமாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்ற மோடி, அங்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபெனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-நார்டிக் நாடுகளின் மாநாட்டிலும் மோடி பங்கேற்றார். பிறகு சுவீடன் அரசரையும் அவர் சந்தித்து பேசினார்.

சுவீடன் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாலை பிரிட்டன் சென்றார். அங்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசி எலிசபெத்தையும் மோடி சந்தித்து பேசினார். அப்போது, சர்வதேச சூரியமின்சக்தி கூட்டமைப்பில் புதிதாக இணைந்துள்ள பிரிட்டனை மோடி வரவேற்றார். லண்டனில் ஆயுர்வேத சிறப்புச் சிகிச்சை மையத்தை மோடி திறந்து வைத்தார்.

பிரிட்டன் பயணத்தின் முக்கிய அம்சமாக, லண்டனில் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்றார்.  இதன் பின்னர், ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருநாடுகளின் நலன்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  இதையடுத்து, ஐந்து நாள் அரசு முறைப் பயணங்களை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் தயாகம் திரும்பும் வழியில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலைச் சந்தித்து பேசினார். நேற்று காலை 8.30 மணியளவில் தாயகம் வந்தடைந்த பிரதமர் மோடியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து