முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவால் குப்பை என வீசப்பட்டவர்தான் விஜயகாந்த் அமைச்சர் ஜெயகுமார் தாக்கு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஜெயலலிதாவால் குப்பை என வீசப்பட்டவர்தான் விஜயகாந்த் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். மேலும் எஸ்.வி. சேகர் சமூகத்துக்கு கேடாக இருக்கிறார். அவர் மீதான புகாரை ஆராய்ந்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

எண்ணம் கிடையாது
மக்களுக்கு எதிரான கருத்துகளை சொல்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகார் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார்,  பொதுவாக யாரையும் காப்பாற்றுவதற்கோ, பாதுகாக்கவோ எண்ணம் கிடையாது. புகார் கொடுத்தால் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் அரசு இருக்கிறது. யாரையும் காப்பாற்ற அரசு இல்லை. அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். எதுவாக இருந்தாலும் நம்முடைய சட்டத்தில் ஒரு முறை இருக்கிறது. புகாரின் பேரில் சட்டமீறல் இருக்கிறதா? உரிமை மீறல் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து நிச்சயமாக நடவடிக்கை இருக்கும் என்று தெரிவித்தார்.

குப்பை என வீசப்பட்டவர்...
தமிழகத்தில் எல்லாவிதமான தூசிகளும் தட்டப்பட்டுவிட்டது. அ.தி.மு.க.வின் செயல்பாடுகள், ஜெயலலிதாவின் நடவடிக்கை, திட்டங்கள் காரணமாக அடையாளம் காணமுடியாமல் குப்பைகளாக மாறிப்போனார்கள். அப்படிப்பட்ட குப்பைகள் எங்களைப் பார்த்து குப்பைகள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவால் குப்பை என வீசப்பட்டவர்கள் எங்களை குப்பை என்று சொல்வதை ஏற்க முடியாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து