முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பயிற்சியின் போது ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 17 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனாவில் டிராகன் படகு போட்டி கலாசார திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஜூன் 18- ந்தேதி இதற்கான போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக சிலர் நீண்ட, குறுகிய வடிவிலான படகுகளில் பயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் பயணம் செய்த படகு ஒன்று கிலின் நகரருகே ஆற்றில் சென்ற பொழுது நீரின் ஓட்டம் அதிகரித்து உள்ளது. இதில் சிக்கிய படகு கவிழ்ந்தது. இதேபோன்று மற்றொரு டிராகன் படகும் பயிற்சி மேற்கொள்பவர்களுடன் சென்று சிக்கி கவிழ்ந்தது.

இதில் 57 பேர் நீருக்குள் மூழ்கினர். அவர்களில் 17 பேர் பலியாகி உள்ளனர். நீரில் மூழ்கியவர்களை மீட்பதற்காக 200 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உயிர்காப்பு கவசம் அணியாமல் பலர் சென்ற நிலையில் பலியானது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து