முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் அடக்குமுறையில் இருந்து தப்பி 9 நாட்கள் கடலிலேயே தவித்த 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பைரூயென்: மியான்மர் அடக்குமுறையில் தப்பி படகில் ஏறி 9 நாட்கள் கடலில் தவித்த 8 குழந்தைகள் அடங்கிய 76 ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு இந்தோனேசியா பாதுகாப்பு அளித்துள்ளது.

மியான்மர் அடக்குமுறையிலிருந்து தப்பி படகில் ஏறி  9 நாட்கள் கடலில் தவித்த 8 குழந்தைகள் அடங்கிய 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் சுமத்திராவில் ஒருவழியாக கரை சேர்ந்தனர். 8 குழந்தைகள், 25 பெண்கள், 43 ஆண்கள் அசேவில் உள்ள பைரூயன் தீவுக்கு கரை சேர்ந்தனர். கடலிலேயே 9 நாட்கள் தத்தளித்ததால் இதில் பலருக்கும் உடலில் நீரின் அளவு குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உணவின்றி தவித்துள்ளனர். இவர்களுக்கு உடலில் தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ளது, கடுமையாகக் களைப்படைந்துள்ளனர் என்பதால் தேவையான மருத்துவ வசதிகளை இந்தோனேசியா செய்து கொடுத்துள்ளது.

மியான்மரின் கொடூரமான இன மையப் போர் நடக்கும் ராக்கைனிலிருந்து தலைக்கு 150 டாலர்கள் கொடுத்து படகைப் பிடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் மலேசியாவுக்குத்தான் செல்வதாக இருந்தது, ஆனால் இந்தோனேசியாவுக்கு வந்துள்ளனர்.

சமூக நலக்குழு ஒன்று இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவு, இருப்பிடம் வழங்கியுள்ளது. பவுத்த ஆதிக்க மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஆவர். குடியுரிமை மறுக்கப்பட்ட இவர்களுக்கு கடுமையாக கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன.

மியான்மரிலேயே அகதிகளாக்கப்பட்டு இவர்கள் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன, அங்கு இவர்களுக்கு வாழ்வாதாரம் என்பதே இல்லை. முகாம்களில் குழந்தைகளுக்குக் கூட போதிய உணவுகளை மியான்மர் வழங்குவதில்லை. இந்நிலையில்தான் அங்கிருந்து பலரும் உயிரைப் பணயம் வைத்து கடல் மார்க்கமாக வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக பெரும்திரளில் வருகின்றனர். இந்நிலையில் 76 பேர்களுக்கும் உதவ பன்னாட்டு புலம் பெயர்வோர் அமைப்பு ஒரு குழுவை இந்தோனேசியா அனுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து