முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: 4-வது நாளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர் : கல்லூரி மாணவிகளை தவறாக வழிக்கு அழைத்து செல்ல ஆசை வார்த்தை காட்டி சிக்கியிருக்கும் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் 4-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார்.

இது தொடர்பாக மனு சாத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.  மனு மீதான விசாரணையில் நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.  நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான உணவு, உடை வழங்கவும் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நேற்று 4வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில், பேராசிரியை நிர்மலா தேவி செல்போனில் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்றும் என்ன பேசினார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து