முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச இணையதளங்களே காரணம் பா.ஜ.க அமைச்சர் கருத்து

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

போபால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச இணையதளங்கள்தான் காரணம் என மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதை தொடர்ந்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 21-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அச்சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச இணையதளங்கள் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், மத்தியப் பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க அரசு 25 ஆபாச இணையதளங்களை முடக்கியுள்ளதாக பூபேந்திர சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து