முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி இன்று முதல் வைகையில் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சித்திரை திருவிழாவையொட்டி வரும் இன்று முதல் 30-ம் தேதி வரை வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா 26-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 30-ம் தேதி காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளுக்கு முன்னர் தண்ணீர் வந்து சேரும் வகையில் வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று, எதிர்வரும் சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்திற்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 216 மி.க.அடி தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து