முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிஷ்க்கின் டெபாசிட்டுகள் முடக்கம்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் வங்கிகளிடம் ரூ.824 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ (எஸ்.பி.ஐ.) வங்கி கூட்டமைப்பு சிபிஐயிடம் புகார் கொடுத்தது.  14 வங்கிகளிடம் பெற்ற கடனை வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாமல் ரூ.824 கோடியே 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கனிஷ்க் தங்க நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்திய ரூ.143.58 கோடி ‘பிக்சட் டெபாசிட்’டுகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. ஆக மொத்தம் இந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.191.58 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் டெபாசிட்டுகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து