முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய பாட்மிண்டன்: சாய்னா, பிரணாய் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

வூகான் நகர்: ஆசிய பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், வீரர் எச்.எஸ். பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர்.

சீனாவிலுள்ள வூகான் நகரில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னாவும், சீன தைபே நாட்டு வீராங்கனையும், நடப்புச் சாம்பியனுமான தாய் சூ யிங்கும் மோதினர்.

அதில் 27-25, 21-19 என்ற கணக்கில் தாய் சூ யிங், சாய்னாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டில் போராடித் தோல்வி கண்ட சாய்னா நெவால், 2-வது செட்டில் தாய் சூ யிங்கிடம் சரணடைந்தார்.

இதுவரை சாய்னா நெவாலும், தாய் சூ யிங்கும் 16 முறை மோதியுள்ளனர். இதில் 8 முறை சாய்னா தோல்வி கண்டுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாயும், சீன வீரரும், ஒலிம்பிக் போட்டி சாம்பியனுமான சென் லாங்கும் மோதினர்.

இதில் சென் லாங் 21-16, 21-18 என்ற கணக்கில் பிரணாயைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து