முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் துறை சார்பில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் வேளாண்மைத் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வேளாண்மை மேம்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் முனைவர் நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ஆய்வு செய்தார். வேளாண்மைத்துறை மற்றம் வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலம் மாவட்டத்தில் பல்வேறு வேளாண்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம் வயலூர் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் வயலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து  50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேன் கூடுகள் வளர்ப்பு, மெழுகு தயாரித்தல் ஆகியவை குறித்து ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வயலூர் கிராமத்திற்கு நேரில் சென்று இப்பயிற்சியினைப் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.  மேலும் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், பெருவயல் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண் பயிர் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்காக ஒரு விவசாயிக்கு ரூ.100 மதிப்பிலான அரசு மானியத்தில் நெல் மற்றும் பயிறு விதைகளும் ரூ.13,500 மதிப்பிலான அரசு மானியத்தில் 10 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.  மாவட்ட கலெக்டர் பெருவயல் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயிடம் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பராமரிப்பு மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் பலன் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து சித்தார்கோட்டை கிராமத்தில் 2016-2017-ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் தென்னை மர வறட்சி பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். கணக்கெடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் காதர் சுல்தான், உதவி பொறியாளர் செல்வம் உட்பட செய்தியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து