முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அரசியலில் பாகிஸ்தானை ஈடுபடுத்துவது ஏன்? காங்கிரசுக்கு அமித்ஷா கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்திய அரசியலில் பாகிஸ்தானை ஈடுபடுத்துவது ஏன்? என்று காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அமித்ஷா பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில்,
திப்பு சுல்தானின் நினைவுதினத்தையொட்டி பாகிஸ்தான் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பது. முகமது அலி ஜின்னாவை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் புகழ்ந்து பேசியிருப்பது தொடர்பான செய்திகள் குறித்த காட்சிகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் சிறப்பான நுண்ணுர்வு இருக்கிறது.

திப்பு சுல்தானின் பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சி முன்பு விழாவாக கொண்டாடியது. அதே போல், பாகிஸ்தான் அரசு  திப்பு சுல்தானின் நினைவு தினத்தை அனுசரித்தது. மணிசங்கர் அய்யர், ஜின்னாவை புகழ்ந்து பேசுகிறார்.
குஜராத் தேர்தலானாலும் சரி, கர்நாடகத் தேர்தலானாலும் சரி, பாகிஸ்தானை ஏன் காங்கிரஸ் ஈடுபடுத்துகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது, அந்தத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கு பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரிகளுடன் காங்கிரஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதே போல், தற்போது ஜின்னா, திப்பு சுல்தான் ஆகியோர் மீது இருதரப்பும் பரஸ்பரம் அன்பு காட்டுகின்றனர். இந்திய அரசியலில் வெளிநாடுகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அந்தப் பதிவுகளில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து