முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணசாமி மருத்துவமனையில் இறந்ததால் பிரேத பரிசோதனை தேவையில்லை: மருத்துவர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      இந்தியா
Image Unavailable

எர்ணாகுளம்: நீட் தேர்வு எழுதுவதற்காக திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனை அழைத்து சென்ற  தந்தை கேரளத்தில் மாரடைப்பால் மரணமடைந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை தேவை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் சென்றிருந்த தந்தை கிருஷ்ணசாமிக்கு, மாணவன் தேர்வெழுத சென்ற நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தற்போது அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தந்தை இறந்த விவகாரம் தேர்வெழுதி விட்டு வந்த மாணவனுக்கு சொல்லப்பட்ட நிலையில், தந்தையின் உடலைப் பார்க்க அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மாணவனின் தந்தை மருத்துவமனையில் இறந்ததால், பிரேத பரிசோதனை செய்யத் தேவை இல்லை என்று கேரள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து