முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மைல்கல்லை கடந்த ராபின் உத்தப்பா

திங்கட்கிழமை, 7 மே 2018      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். தொடரின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி வீரர் ராபின் உத்தப்பா 54 ரன்கள் எடுத்தார். இதில் 17 ரன்கள் எடுக்கும் போது ராபின் உத்தப்பா புதிய மைல் கல்லை எட்டினார். அவர் ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதுவரை 153 ஐ.பி.எல். போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ராபின் உத்தப்பா 4037 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 23 அரைசதங்கள் அடங்கும். உத்தப்பாவை தவிர டேவிட் வார்னர் (114 போட்டி), விராட் கோலி (128 போட்டி), சுரேஷ் ரெய்னா (140 போட்டி), கவுதம் காம்பீர் (140 போட்டி), ரோகித் சர்மா (147 போட்டி) ஆகியோரும் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். டோனி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் 3900 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். அவர்களும் இந்த சீசனிலேயே 4 ஆயிரம் ரன்களை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து