முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் விடைபெறும் நேரம் வந்துவிட்டது - எடியூரப்பா டுவிட்டரில் கருத்து

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் விடைபெறும் நேரம் வந்து விட்டது என்று பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த சிட்பண்ட் மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய தொழிலதிபர் விஜய் ஈஸ்வரன் 2013 செப்டம்பரில் சீனாவில் நடந்த மாநாட்டில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது விஜய் ஈஸ்வரன் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஹுப்லோட் கைக்கடிகாரத்தை சித்தராமையாவுக்கு அன்பளிப்பாக அளித்ததாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது.

தேர்தலையொட்டி பா.ஜ.க. தலைவர்கள் இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளனர். விஜய் ஈஸ்வரனும் சித்தராமையாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பா.ஜ.க.  வெளியிட்டது. இதுபற்றி எடியூரப்பா டுவிட்டரில் கூறும்போது, பொதுமேடை விவாதத்துக்கு சித்தராமையா சவால் விடுத்துள்ளார். அதற்கு எந்த நேரம் சரியானது என்பதை ஹுப்லோட் கைக்கடிகாரம் காட்டும். விஜய் ஈஸ்வரனையும் உடன் வைத்துக் கொள்ளலாம். கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் விடைபெறும் நேரம் வந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து