முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரையூர் அருகே கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இருவர் பலி:

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-  மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கோவில் திருவிழாவிற்கு வந்த இரு வாலிபர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரையூர் தாலுகா அத்திபட்டி கிராமத்தில் புகழ்பெற்ற புதுமாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாத கடைசியில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.இதில் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் மதன்குமார்(23),நல்லதம்பி என்பவரது மகன் சங்கையா(27) ஆகிய இருவரும் நேற்று முன்திம் இரவு திருவிழாவிற்கு வந்துள்ளனர்.நெருங்கிய நண்பர்களான இவ்விருவரும் கோவிலருகே நடைபெற்ற கலை நிகழச்சிகளை ரசித்து பார்த்துள்ளனர்.பின்னர் நேற்று அதிகாலை 2மணியளவில் திருவிழா முடிந்து வீடு திரும்பிடும் போது இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே ஒதுங்கியுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பலஅடி தூரம் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் மதன்குமார் மற்றும் சங்கையா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சாப்டூர் போலீசார் விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவில் திருவிழாவிற்கு வந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அத்திபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து