முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி நடிகை கொலை வழக்கில் 2 துணை நடிகர்கள் குற்றவாளிகள் - மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 மே 2018      சினிமா
Image Unavailable

மும்பை : இந்தி நடிகை மீனாட்சி தாபா கடந்த 2012-ம் ஆண்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் துணை நடிகர்கள் 2 பேரை குற்றவாளிகளாக மும்பையில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹீரோயின் பட நாயகியான மீனாட்சி தாபாவை, துணை நடிகர்களான அமித் ஜெய்ஷ்வால், அவரது தோழி ப்ரீத்தி சுரின் ஆகியோர் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை 2 பேரும் கடத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து, மீனாட்சி தாபாவின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க 2 பேரும் திட்டமிட்டனர். ஆனால், மீனாட்சி தாபாவின் குடும்பத்தினரால் பணம் தர முடியாது என்பதை அறிந்து கொண்டதும், அவரை கொடூரமாக கொலை செய்தனர்.

மீனாட்சி தாபாவின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி, பணம் எடுத்தபோது, அதை வைத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து, மும்பையில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. அப்போது அமித் ஜெய்ஷ்வால், அவரது தோழி ப்ரீத்தி சுரின் ஆகியோரை குற்றவாளிகளாக நீதிபதி அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து