முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கான தண்டனையை உயர்த்த மத்திய அரசு திட்டம்

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வயதான பெற்றோரை கைவிடும் அல்லது துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் 3 மாத சிறைத் தண்டனையை 6 மாதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களை பராமரித்தல் மற்றும் பேணிக்காத்தல் சட்டம் 2007-ல் சில மாற்றங்களை செய்ய மத்திய சுமூக நீதித் துறை ஆலோசித்து வருகிறது. அதில், முதியவர்களை பராமரிக்காத பிள்ளைகள் என்ற வார்த்தை, தத்தெடுத்து வளர்த்த பிள்ளை, வளர்ப்புப் பிள்ளை, மருமகன், மருமகள், பேரக் குழந்தைகள், சிறுமி, சிறார்கள் என சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அனைவரையும் குறிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது இருக்கும் இந்த சட்டத்தின்படி, பிறந்த பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகள் மட்டுமே முதியவர்களை பராமரிக்கும் பொறுப்பின் கீழ் வருகிறார்கள். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்களை மட்டுமே தண்டிக்க சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒரு வேளை, தனது பிள்ளைகள் அல்லது பிள்ளை தன்னை கவனிக்காவிட்டால், பராமரிப்பு வாரியத்தை முதியவர்கள் அணுகி தீர்வு பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து