முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 பொதுத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது: சீதாராம் எச்சூரி

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர் : வரும் 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி தெரிவித்துள்ளார். ஒடிசாவில், 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள சீதாராம் எச்சூரி, புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் வாக்குகளை குறி வைப்பதில், அக்கட்சி காட்டி வரும் முனைப்பை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க. அரசின் கொள்கைகளால், நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகவும் வாழும்நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சூரி கவலை தெரிவித்தார்.

வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில், எந்தவொரு அரசியல் அணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ மார்க்சிஸ்ட் கட்சி இணையாது என்றும், அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து இறக்குவதுதான் நமது பிரதான குறிக்கோள் என்றும் எச்சூரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து