முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம்-ஒழுங்கு குறித்து தி.மு.க. பேசக்கூடாது அமைச்சர் ஜெயகுமார் பதிலடி

சனிக்கிழமை, 12 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க பேசக்கூடாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தெரியும்
அமைச்சர் ஜெயகுமார் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க விமர்சிப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க பேசக்கூடாது. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும்.

தி.மு.க ஆட்சியில்...
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஜெயிலர் எரித்து கொல்லப்பட்டது, சென்னை சட்டக்கல்லூரி மோதல், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி மண்டை உடைக்கப்பட்டது. இவை எல்லாம் தி.மு.க ஆட்சியில் அரங்கேறியது. தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது. தி.மு.க ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாத நிலையில் இருந்தது. தி.மு.க ஆட்சியில் டிசம்பர் 6 வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது.

இது நேரமில்லை
சசிகலா திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது அவர்களின் குடும்ப பிரச்சனை, அவர்களின் குடும்ப பிரச்சனை குறித்து பேச விரும்பவில்லை. கூட்டணி குறித்து பேச இது நேரமில்லை. தேர்தல் சமயத்தில் கட்சி தலைமை இதுகுறித்து முடிவு செய்யும். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து