முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்து வழக்கில் ராஜஸ்தான் ஐகோர்ட் தீர்ப்பு சரியே: சுப்ரீம் கோர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: விவாகரத்து வழக்கில் ராஜஸ்தான் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், விவாகரத்து பெற்று பிரிந்த பிறகும், முன்னாள் மனைவி அல்லது அவருடைய உறவினர்களுக்கு முன்னாள் கணவர் தொந்தரவு கொடுத்தால், அவருக்கு எதிராக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குடும்ப வன்முறைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே அந்த தம்பதி பிரிந்திருந்தாலும், அந்த முன்னாள் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஒரு பெண்ணின் முன்னாள் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அவருடைய மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.பானுமதி, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குறைஞர் துஷ்யந்த் பராசர் முன்வைத்த வாதம் வருமாறு: குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், கடந்த 2006-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் நிகழ்ந்த குடும்ப வன்முறைகளுக்கு எதிராக, அச்சட்டத்தை பயன்படுத்த முடியாது. இதனால், குடும்ப வன்முறைச் சட்டம், தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ராஜஸ்தான் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று மறுத்து விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து