முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் - மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

திங்கட்கிழமை, 14 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

சாஸ்திரியின் உடல் தகனம் செய்வதற்காக இந்தியா கொண்டுவரப்பட்டதா அல்லது வெளிநாட்டு மண்ணிலேயே (சோவியத் ரஷ்யா) எரிக்கப்பட்டதா எனக் கோரி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் சாஸ்திரியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, “லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராஜ் நாராயண் குழுவின் ஆவணங்கள் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் வெளியிட வேண்டும்.

நாட்டின் முக்கிய தலைவர் மரணம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. அதைத் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சாஸ்திரிக்கு என்ன நடந்தது என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது பிரதமர் அலுவலகத்தின் அடிப்படை பொறுப்பு ஆகும்” என்றார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே 1965-ல் போர் நடைபெற்றது. அதன் பிறகு 1966 ஜனவரி 11-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது ஆயுப் கானும் பங்கேற்றனர். அப்போது தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த சில மணி நேரத்தில் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும், பனிப்போர் உச்சத்தில் இருந்த சூழ்நிலையில் சாஸ்திரி மரணத்தில் சதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த 1977-ம் ஆண்டு அப்போதைய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, ராஜ் நாராயண் குழுவை அமைத்தது. அக்குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் விவரத்தை அரசு வெளியிடவில்லை.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ், குழு அறிக்கையை வெளியிடக் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்த போதும், ரகசியம் எனக் கூறி அதை வெளியிட அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், 2011-ல் இதுதொடர்பான ஒரு மனுவை விசாரித்த சிஐசி, சாஸ்திரி மரணம் தொடர்பான 11 ஆவணங்களை வெளியிடுமாறும் வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ள ஒரு ஆவணத்தை வெளியிடத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து