முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை 29-ம் தேதி கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபை வரும் 29-ம் தேதி கூடுகிறது.

தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்ததும், சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் ஏப்ரல் 19-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின்னர், 22-ம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசினார். அத்துடன் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அலுவல் கூட்டத்தில் முடிவு

இந்த நிலையில் சட்டசபையின் மானியக்கோரிக்கை விவாதங்களுக்கான கூட்டத் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. அப்போது மொத்தம் 32 மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டியிருப்பதால் கூட்டத் தொடர் 25 நாட்கள் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து வரும் 29-ம் தேதி கூட்டத்திற்கு பின்னர் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டியுள்ளார் என்று அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து