முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் பரா நகரை கைப்பற்ற ஆப்கனில் பரா நகரை கைப்பற்ற தலிபான்கள் தீவிர சண்டை

புதன்கிழமை, 16 மே 2018      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கனின் மேற்குப் பகுதியிலுள்ள பரா நகரில் அரசுப் படையினருடன் தலிபான் பயங்கரவாதிகள் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நகரின் முக்கியப் பகுதிகளுக்குள் அவர்கள் முன்னேறியுள்ளதால் அந்த நகரம் தலிபான்களிடம் வீழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பரா மாகாண கவுன்சில் உறுப்பினர் ஜமீலா அமானி கூறியதாவது: தங்களது வருடாந்திர தீவிர தாக்குதல் பருவம் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், மாகாண தலைநகர் பராவைக் கைப்பற்றும் நோக்கில் தங்கள் தாக்குதலை திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கினர்.

ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்திய அவர்கள், ஒவ்வொரு புறநகர் பகுதியாகக் கைப்பற்றி முன்னேறினர். பரா நகருக்குள் பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான்களுக்கும் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.

ராணுவத்துக்கு ஆதரவாக ஆப்கன் விமானப் படை தலிபான் நிலைகள் மீது குண்டுவீச்சு நடத்தியது என்றார் அவர்.
தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக காந்தஹார் மற்றும் ஹெராத் பகுதியிலிருந்து பாதுகாப்புப் படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சஹார் பாக், ஹைதர் அலி, ராய்கி, அஸாத் அபாத் என நான்கு திசைகளைச் சேர்ந்த பகுதிகள் வழியாகவும் நூற்றுக்கணக்கான தலிபான்கள் பரா நகருக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் உயிரிழந் ததாகவும், சில வீரர்களை தலிபான்கள் பிடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ராணுவ தளவாடங்கள் பலவற்றை தாக்கி அழித்த தலிபான்கள், ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், தலிபான்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ள உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஜீப் டானிஷ், பரா நகரைக் கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் தோல்வியடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து